ஆளுமை:சுந்தரமூர்த்தி, கே. ஆர்.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரமூர்த்தி
தந்தை இராசு
தாய் கெளரியம்மா
பிறப்பு 1939.09.17
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுந்தரமூர்த்தி, இராசு (1939.09.17 - ) யாழ்ப்பாணம், இணுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை இராசு; தாய் கெளரியம்மா. இவர் தனது பத்தாவது வயதில் நாராயண சுவாமியிடம் நாதஸ்வரம் பயில ஆரம்பித்துப் பின்னர் பிரபல நாதஸ்வர மேதைகளான மாவிட்டபுரம் இராசா, V. உருத்திரபதி ஆகியோருடன் இணைந்து வாசித்து வாசிப்பின் நுட்பங்களைத் தெரிந்து கொண்டதன் பின்னர் தென்னிந்திய நாதஸ்வரக் கலைஞர்களான திருவாவூர் ராஜரத்தினம்பிள்ளை, S.P.M. திருநாவிற்கரசு ஆகியோருடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்திருக்கின்றார்.

இவர் 1951 ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வருகின்றார். இவர் ஆலய வைபவங்கள், திருமண மற்றும் விசேட நிகழ்வுகளிலும் சேவையாற்றியுள்ளார். இவரது நாதஸ்வர இசைநுட்பங்களால் 'நாதஸ்வரஜோதி' , 'நாதஸ்வர கான கலாரத்தினம்', 'நாதஸ்வர இன்னிசை வேந்தர்' எனப் பல சிறப்புப் பட்டங்களைப் பெற்றதோடு 2000 ஆம் ஆண்டு இலங்கை அரசின் கலாச்சாரப் பிரிவு வழங்கிய 'கலாபூஷணம்' பட்டத்தையும் பெற்றுள்ளார். இவருக்கு 1963 இல் நாதஸ்வர கான கலாரத்தினம், 1966 இல் நாதஸ்வர கலாஜோதி, 1970 இல் நாதஸ்வர இசைரத்தினம், 2000 இல் கலாபூஷணம், 2006 இல் உடுவில் பிரதேச செயலகத்தால் ஞான ஏந்தல் ஆகிய பட்டங்களும் 2007 ஆம் ஆண்டுக்கான கௌரவ ஆளுநர் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 87-88
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 565-566


வெளி இணைப்புக்கள்