ஆளுமை:சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தம்பிப் புலவர்
தந்தை வில்லவராய முதலியார்
பிறப்பு 1716
இறப்பு 1780
ஊர் நல்லூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்தம்பிப் புலவர், வில்லவராய முதலியார் (1716 - 1780) யாழ்ப்பாணம், நல்லூரைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை வில்வராய முதலியார். தனது 7 ஆவது வயதிலிருந்து கவி புனையும் ஆற்றல் பெற்ற இவர், பதினைந்தாவது வயதளவில் சிதம்பரம் சென்று தலயாத்திரை செய்து திரும்புகையில் வேதாரணிய ஆதீனத்தில் மறைசையந்தாதி பாடி அரங்கேற்றி, அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகரால் பாராட்டுப்பெற்றார்.

இவர் மறைசை அந்தாதி, கல்வளை அந்தாதி, கரவை வேலன் கோவை, பறாளை விநாயகர் பள்ளு ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். ஒல்லாந்த அரசினால் தேசவழமைச் சட்டம் நூலைத் திருத்தியமைக்க இவர் வேண்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 108
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 22-25
  • நூலக எண்: 963 பக்கங்கள் 122
  • நூலக எண்: 15515 பக்கங்கள் 59-61