ஆளுமை:அகிலன், பாக்கியநாதன்

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:31, 13 அக்டோபர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அகிலன்
தந்தை பாக்கியநாதன்
பிறப்பு
ஊர்
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அகிலன், பாக்கியநாதன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர், கவிஞர், ஆய்வாளர். இவரது தந்தை பாக்கியநாதன். இவர் பரோடாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். இவர் கலைவரலாற்றைப் பயில்துறையாகக் கொண்டதுடன் காண்பியக் கலைகள், நாடகமும் அரங்கக் கலைகளும் மரபுரிமைக்கல்வியும் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர்.

இவரது நூல்களாக பதுங்குகுழி நாட்கள், சமரகவிகள், காலத்தின் விளிம்பு ஆகியன விளங்குகின்றன. இவர் இலங்கைச் சமூகத்தையும் பண்பாட்டையும் வாசித்தல் நூல் வரிசையின் இரண்டாம் மூன்றாம் தொகுதிகளுக்கும் வாதங்களும் விவாதங்களும் நூலுக்கும் இணைத்தொகுப்பாசிரியராகவும் பங்களித்துள்ளார்.


வளங்கள்