ஆளுமை:வைத்திலிங்கம், துரையப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வைத்திலிங்கம், துரையப்பா
தந்தை துரையப்பா
பிறப்பு 1939.01.19
இறப்பு 2008.05.28
ஊர் கலட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

து.வைத்திலிங்கம் (1939.01.19 - 2008.05.28) யாழ்ப்பாணம் கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் எழுத்தாளர், நிர்வாக அதிகாரி. இவரின் தந்தை பெயர் துரையப்பா. படைப்பாளியான இவரின் ஆளுமையை இரண்டு பக்கங்களில் மிகத் தெளிவாக நோக்க முடியும். ஒன்று அவரின் அரச நிர்வாகப்பணி, மற்றையது இவரது இலக்கியப் பணி. இவர் அரசபணியில் இறுதியாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையார்றி ஓய்வு பெற்றவர்.

மற்றையது எழுத்துப்பணி. இதில், மண்ணின் கனவுகள், என்ற சிறுகதை தொகுதியையும், ஒரு திட்டம் மூடப்படுகிறது, பூம்பனிமலர்கள், சிறைப்பறவைகள், மண்ணின் குழந்தைகள், முதலான குறுநாவல்களையும், நாவல்களையும் ஆக்கித்தந்துள்ளார். எழுத்துத் துறையில் இவரது சாதனைக்காக யாழ்.இலக்கிய வட்டம், தகவம் போன்ற நிறுவனங்களினால் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 48


வெளி இணைப்புக்கள்