ஆளுமை:வேதவல்லி, கந்தையா

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:07, 30 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வேதவல்லி கந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேதவல்லி கந்தையா
பிறப்பு 1920
இறப்பு 1988
ஊர் வட்டுக்கோட்டை
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேதவல்லி கந்தையா (1920 - 1988 ) யாழ்ப்பாணம், வட்டுக்கோடையைச் சேர்ந்த ஆசிரியர். இவர் இலங்கைப் பொதுவுடமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தார். இவர் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பரீட்சயமுடையவர். தலைமைத்துவப் பண்புகளுடன் மிளிர்ந்தவர். நீர்வேலி அகத்தியார் இந்துக்கல்லூரியில் தமது ஆசிரியர் சேவையை தொடங்கினார். கோப்பாய் கிறீஸ்தவ கல்லூரியில் இறுதியாகச் சேவையாற்றி இளைப்பாறினார்.

யாழ் மாவட்ட சனசமூக நிலையங்களின் சமாசம், யாழ். மாவட்ட கம்யூனிஸ்ட் மகளிர் அமைப்பு, யாழ். மாவட்ட மகளிர் குழு, யாழ் மாவட்ட ஐக்கிய நாணய சங்கங்களின் சமாசம், வலிகாமம் கிழக்குப்பகுதி மகளிர் குழுக்கள், நீர்வேலி சமுதாய முன்னேற்றக் கழகம், நீர்வேலி ஶ்ரீ முருகன் மாதர் ஐக்கிய நாணய சங்கம் போன்ற பல அமைப்புகளின் தலைவராகவும், உபதலைவராகவும், போஷகராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 10145 பக்கங்கள் 93-94