ஆளுமை:முத்துக்குமார், பொன்னுத்துரை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:19, 4 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=முத்துக்கு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முத்துக்குமார்
தந்தை பொன்னுத்துரை
பிறப்பு 1920.05.05
ஊர் பொன்னாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முத்துக்குமார், பொன்னுத்துரை (1920.05.05 - ) யாழ்ப்பாணம், பொன்னாலை, சுழிபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பொன்னுத்துரை. 1950ஆம் ஆண்டிலிருந்து கலைத்துறையில் பிரவேசிக்கும் இவர் தமிழ் மரபு, சைவ சமய பாடத்திரட்டு, மாணவர் கட்டுரைகள், செந்தமிழ்த் தேன், இன்பத் தமிழ், தமிழ் இலக்கியம், சிலம்பின் சிறப்பு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். மேலும் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் கம்பராமாயண வகுப்புக்களையும், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வர வித்தியாலயத்தில் சிலப்பதிகார வகுப்புக்களையும் நடத்தியுள்ளார். 1956ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைப்பெற்ற முதலாவது அனைத்துலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் ஆராய்ச்சி கட்டுரை எழுதியதோடு இவர் 1964 - 1967ஆம் ஆண்டு வரை இலங்கைக் கம்பன் கழகத் தலைவரகப் பணிபுரிந்துள்ளார். இவரது சேவைக்காக சாகித்திய மண்டலத்திற்கான இலக்கிய விருது கிடைத்துள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 44