ஆளுமை:மாலதி, சிவகுமார்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:04, 8 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மாலதி சிவகு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாலதி சிவகுமார்
தந்தை தர்மா
பிறப்பு 1952
ஊர் காரைநகர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாலதி சிவகுமார் காரைநகர் வலந்தலையைச் சேர்ந்த சண்முகம் தர்மா அவர்களது மகளாவார். இவர் 1952ம் ஆண்டு கொழும்பில் பிறந்தார். ஆரம்பக் கல்வியை இலகடி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப்பட்டதாரியாகவும், ஆசிரிய பயிற்சிக் கல்லூரியில் விசேட பயிற்சி ஆசிரியையாகவும் பெற்றார்.

பரத நாட்டியத்தை 8 வருடங்கள் பயின்று டிப்ளோமா பட்டத்துடன் 1970ம் ஆண்டு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வழுவூர் இராமையா முன்னிலையில் அரங்கேற்றம் நடைபெற்றது. வழுவூரார் அவர்களால் 'நாட்டிய கலாசிகாமணி என்ற விருதும் வழங்கப்பட்டது. இதுவே காரைநகர் வரலாற்றில் முதலாவது பரதநாட்டிய அரங்கேற்றமாகும்.

1975ம் ஆண்டு தொடக்கம் காரை இந்துக் கல்லூரி, யாழ்டன் கல்லூரி, மாத்தளை பாக்கிய வித்தியாலயம், யாழ் இந்து மகளிர் கல்லூரி, கொழும்பு விவேகானந்தாக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியையாகவும் கொழும்பு விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் பின் கொழும்பு வலயக் கல்வித் திணைக்களப் பணிப்பாளராகவும் பணியாற்றினார். பரத நாட்டிய பாடத்தில் அரச பிரதம பரீட்சகராக பல ஆண்டுகள் சேவை செய்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 338-339
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாலதி,_சிவகுமார்&oldid=158299" இருந்து மீள்விக்கப்பட்டது