ஆளுமை:மாத்தளை சோமு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மாத்தளை சோமு
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மாத்தளை சோமு மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர். சிறுகதை, புதினம், பயண இலக்கியம் முதலான துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். இவர் இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியவர். நவரசம் என்னும் மத இதழில் ஆசிரியராகவும், சென்னை மக்கள் மலரின் உதவி ஆசிரியராகவும் இருந்தவர். ஆஸ்திரேலியாவில் சிட்னி தமிழ்க் குரலின் தலைவராகவும், மலேசியாவிலுள்ள உலக சிலம்ப மாமன்றத்தின் பண்பாட்டு ஒருங்கிணைப்பாளராகவும் திருச்சி தமிழ்க்குரல் பதிப்பக ஆலோசகராகவும் கெளரவ சேவைகளை வழங்கி வருகின்றவர். இவரது பல நூல்கள் தமிழ்க்குரல் பதிப்பகத்தின் வெளியீடுகலாகவே வெளிவந்திருந்தன. இலங்கை, தமிழக, அவுஸ்திரேலிய, ஐரோப்பிய, சிங்கப்பூர், கனேடிய தமிழ் இதழ்களில் இவரது படைப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன.

இவரது 'அந்த உலகத்தில் இந்த மனிதர்கள்' என்ற நாவல் 1991இல் இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றது. இவரது 'மூலஸ்தானம்' நாவலுக்காக இது இவருக்கு வழங்கப்பட்டது. அத்துடன் மலேசியாவின் ஈப்போ நகரிலுள்ள மலேசிய பாவானார் மன்றத்தின் "புதினத் தென்றல்" விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 437-438
  • நூலக எண்: 1663 பக்கங்கள் 61-66
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மாத்தளை_சோமு&oldid=168354" இருந்து மீள்விக்கப்பட்டது