ஆளுமை:மருதூர்க் கொத்தன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:00, 16 மார்ச் 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இஸ்மாயில்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இஸ்மாயில்
பிறப்பு 1935.06.06
ஊர் அனுராதபுரம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இஸ்மாயில், வி. எம். (1935.06.06 - ) அனுராதபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் மருதூர்க் கொத்தன் என்ற புனைபெயரால் பலராலும் அறியப்பட்டார். இவர் கல்முனை பிரதேச முற்போக்கு எழுத்தாளர் சங்க தலைவராகவும் கல்முனை தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார். தினகரன், வீரகேசரி, ஈழநாடு, நவமணி, தாமரை, மல்லிகை, அஞ்சலி, கற்பகம், காலரதம், புதுமை இலக்கியம், களம் ஆகிய பத்திரிகைகளிலும் இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

காவியத்தலைவன், மருதூர்க் கொத்தன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு), இலக்கிய நயப்பு கட்டுரைகள் ஆகியன இவரது படைப்புக்களாகும். இலக்கிய வேந்தர், கலாபூஷணம் ஆகிய பட்டங்களையும் வாழ்வோரை வாழ்த்துவோம் விருது, ஆளுநர் விருது ஆகிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

மருதூர்க் கொத்தன் பற்றி தமிழ் எழுத்தாளர்கள் வலைத்தளத்தில்


வளங்கள்

  • நூலக எண்: 2065 பக்கங்கள் 76