ஆளுமை:மரியதாஸ், அறுகாஞ்சிப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:26, 25 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மரியதாஸ்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மரியதாஸ்
தந்தை அறுகாஞ்சிப்பிள்ளை
பிறப்பு 1941.09.06
ஊர் இளவாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மரியதாஸ், அறுகாஞ்சிப்பிள்ளை (1941.09.06 - ) யாழ்ப்பாணம், இளவாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை அறுகாஞ்சிப்பிள்ளை.

20க்கும் மேற்பட்ட நாடகங்களிலும் 100க்கும் அதிகமான மேடைகளிலும் இவர் நடித்துள்ளார். அரிச்சந்திரன், கற்பலங்காரன், சிலை எடுத்த சேரன், நொண்டி, எஸ்தாக்கி, கண்டியரசன், தேவசகாயம், நந்திவர்மன் போன்றன இவர் நடித்த நாடகங்களாகும். யாழ்ப்பாண வேம்படி மகளிர் கல்லூரி, அச்செழு பாடசாலை, பொஸ்கோ, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், உத்தரிய மாதா ஆலயம், திருமறைக் கலாமன்றம் ஆகியவற்றில் பல மாணவர்களுக்கு இவர் நாடகங்கள் பழக்கியுள்ளார்.

2002இல் யாழ்ப்பாண பிரதேச கலாசார பேரவையினாலும், பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், யாழ்ப்பாண திருமறைக் கலாமன்றம், குருநகர் கலைக்கழகம், யாழ்ப்பாண திருக்குடும்ப கன்னிய மடம் ஆகிய இடங்களில் இவர் பல பரிசில்களையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 207