ஆளுமை:மகாலிங்கம், சின்னத்தம்பி
பெயர் | மகாலிங்கம் |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1956.12.24 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகாலிங்கம், சின்னத்தம்பி (1956.12.24 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. கவிதை எழுதல், பட்டிமன்றம் போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டுள்ள இவர் 30 வருடகால அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.
யாழ்ப்பாண கைலாசபதி கலையரங்கு, கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி உட்பட பல இடங்களில் 24க்கும் மேற்பட்ட நாடகங்களில் இவர் நடித்துள்ளார். மறுமலர்ச்சி, இறைவன் இருக்கின்றானா, ஏர் சுமந்த தோள்கள், விடியலை நோக்கி, சமாதனம், விதைப்பு போன்ற இவரது நாடகங்கள் பல போட்டிகளில் பல பரிசில்களை பெற்றுள்ளதோடு நானே ராஜா, இங்கேயும் இப்படி, சீரடையாச் சித்திரங்கள், மார்க்கமொன்று நாம் படைப்போம், கைக்கெட்டியது, கொட்டும் குருதி, வீரத்தின் விளைநிலம், விழிப்பு, போர் புரிய வா, குமணன், அன்னை நிலம் ஆகிய நாடகங்களை பிரதியாக்கம், நெறியாள்கை செய்தும் நடித்துள்ளார். மேலும் நினைவாகிப்போன நியம், திசை மாறிய விசை போன்ற இரு சிறுகதைகளை இவர் எழுதியுள்ளார். சிறந்த நடிகருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 205