ஆளுமை:மகாதேவா, பொன்னுச்சாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகாதேவா
தந்தை பொன்னுச்சாமி
பிறப்பு 1942.04.25
ஊர் பருத்தித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மகாதேவா, பொன்னுச்சாமி (1942.04.25 - ) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னுச்சாமி. செ. பொன்னுச்சாமியிடம் கலைப்பயிற்சிப் பெற்ற இவர் 1960ஆம் ஆண்டிலிருந்து நாடகத்துறையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவர் நாடகத்துறையைப் பொறுத்தவரையில் டிராமாஸ்கோப் வகையிலான பல நாடகங்களை தயாரித்து இயக்கி கதைவசனம் எழுதி பல நாடகங்களில் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். முடியாத முடிச்சு, தணியாத தாகம், அவனும் மனிதன் தான், தைமூர், சுதந்திர நாட்டு அடிமைகள், நீயுமா போன்றன இவர் நடித்த நாடகங்களாகும்.

1965இல் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டியில் வடமராட்சியில் முதலாவது ஆணழகனாகத் தெரிவு செய்யப்பட்டு மிஸ்ரர் வடமராட்சி என்ற பட்டத்தையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 204