ஆளுமை:பொன்னையா, கார்த்திகேசு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னையா, கார்த்திகேசு
தந்தை வேலாயுதர் கார்த்திகேசு
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு 1907
இறப்பு 1981.01.08
ஊர் வேலணை
வகை இலக்கியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கார்த்திகேசு பொன்னையா அவர்கள்(தீரர் பொன்னையனார் எனவும் அறியப்பட்டார்) வேலணையை பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த சமூக சேவகர், இலக்கியவாதி, நாட்டுப் பற்றாளரார், மக்களுக்கு நடுவராகவும் விளங்கினார். இவர் வேலணை ஐக்கிய பண்டகசாலை முகாமையாளராகவும், பலநோக்கு சங்க முகாமையாளராகவும் கடமை புரிந்துள்ளார்.

இக் காலத்தில் இவரின் மேற்பார்வையின் கீழ் சரஸ்வதி வித்தியாசாலை புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு மேலதிக கட்டிடங்களும் கட்டப்பட்டன. அதுமட்டுமல்லாமல் 1935க்கு மேற்பட்ட காலத்தில் இவர் தமிழ்நாடு பலசகாய நிதிய சங்கத்தில் நிரந்தர உறுப்பினராகவும், தீவுப்பகுதி ஐக்கிய நாணய சங்கத்தின் பிரதிநிதியாகவும் மக்களுக்கு வேண்டிய சகல உதவிகளையும் செய்ததோடு அந்தக் காலத்தில் குடிசன மதிப்பீடு செய்வதற்காக தெரிவாகி சேவை திறம்படச் செய்து சான்றிதழையும் பெற்றுக்கொண்டார்.

வேலணை கிழக்கில் அரசினர் பாடசாலை ஒன்றை நிறுவ எண்ணி அதற்காக அவருடைய காணியை நன்கொடையாக கொடுத்து பலரது உதவியோடும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாடசாலையாக வேலணை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயருடன் இப் பாடசாலையை இயங்க வைத்தார். இன்று இப் பாடசாலை வேலணை கிழக்கு மகாவித்தியாலயமாக இயங்கி வருவது குறிப்பிடதக்கது. அதுமட்டுமல்லாமல் வேலணை கிழக்கு பெருங்குளம் முத்துமாரியம்மன் கோவில் திருப்பணிகள் சிறப்பாக அமைய அரும்பாடுபட்டவர்களில் இவரும் ஒருவராவார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 532-536