ஆளுமை:பொன்னம்பலம், சிதம்பரபிள்ளை (எழுத்தாளர்)

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:30, 3 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம்
தந்தை சிதம்பரபிள்ளை
பிறப்பு 1942.11.17
ஊர் காரைநகர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பொன்னம்பலம், சிதம்பரபிள்ளை (1942.11.17 - ) யாழ்ப்பாணம், காரைநகரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிதம்பரபிள்ளை. இவர் தனது பாடசாலை கல்வியை முடித்த பின்னர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். தனது 13ஆவது வயதிலிருந்தே இலக்கியத்துறையில் தடம் பதித்த இவர் சுந்தரத் தமிழ் மாலை, திண்ணபுரக் கவிமலர், வாணி மலர், இலக்கிய வழிகாட்டி, புறநானூறு, இலக்கண வினா விடை, கட்டுரைக் கதம்பம், கம்பன் கண்ட வாலி, பாஞ்சாலி சபதம், தங்க நூல் திரட்டு, கட்டுரைக் குறிப்பு, ஆண்டி முனிவர் புராணம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். மேலும் காரைநகர் இந்துக் கல்லூரியில் அதன் ஸ்தாபகரான சயம்பருக்கு 1976ஆம் ஆண்டு சிலை அமைத்த பெருமையும் இவருக்கே உரியது ஆகும். இவருக்கு கலைஞான வித்தகர் எனும் பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.


இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 40