ஆளுமை:புஷ்பரட்ணம், பரமு
பெயர் | புஷ்பரட்ணம், பரமு |
தந்தை | பரமு |
பிறப்பு | 1955.09.08 |
ஊர் | நல்லூர் |
வகை | கல்வியியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ப.புஷ்பரட்ணம் (1955.09.08 - ) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓர் கல்வியியலாளர், வரலாற்று ஆய்வாளர், பேராசிரியர். இவரது தந்தை பெயர் பரமு. இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி, முதுகலைமாணி பட்டங்களைப் பெற்று தமிழ் நாடு தஞ்சாவூர் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையே தொல்லியல், கோவிற்கலை என்பனவற்றில் கலாநிதிப்பட்டமும் பெற்றுக் கொண்டார். காரைக்குடி பல்கலைக்கழகத்தில் P.G.Dip பட்டமும் பெற்றுக் கொண்டார். யாழ் பல்கலைக்கழகத்தில்சிரேஷ்ட விரிவுரையாளராகவும் யாழ்.பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவராகவும் சிரேஷ்ட மாணவ ஆலோசகராகவும் கடமையாற்றிவருகின்றார்.
கல்வித்துறைக்கும் அப்பால் கலாசாரக் கற்கைப் பணிப்பாளராகவும், IRQUE திட்ட இணைப்பாளராகவும், தொல்லியற் பொருட் சேமிப்பு செயலாளராகவும், ICOMOS சுனாமியால் பாதிப்புற்ற பகுதிகளுக்கான இணைப்பாளராகவும், யாழ் விஞ்ஞான சங்கத் தலைவராகவும், புத்தூர் சோமஸ்கந்தாக் கல்லூரியின் பழைய மாணவர்சங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். நாடுகடந்த அளவில் மைசூர் கல்வெட்டுச்சபை, சென்னை நாணயச் சபை, தமிழ்நாடு வரலாற்றுக் காங்கிரஸ், தமிழ்நாடு தொல்லியம் மன்றம், தமிழ்நாடு உலோக நாணயச் சபை ஆகிய தொழில்சார் மன்றங்களின் அங்கத்தவராக செயற்பட்டு வந்துள்ளார்.
எழுத்துலகில் வராற்றுத்துறை சார்ந்து யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகர் (சிங்கை நகர்), பூநகரியில் நடந்த தொல்லியல் ஆய்வு, ஆதித் தமிழரின் நாணயங்கள், புரதான இலங்கையில் தமிழும் தமிழரும், கதிரமலை கந்தரோடை, தொல்லியற் தோற்றம் என பத்திற்கும் மேற்பட்ட நூல்களையும் ஆய்வுக்கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.
இவர் இலங்கை அரசின் சாகித்திய விருதுகளை 1993, 2003 களிலும் வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய விருதினை 2000ஆம் ஆண்டிலும் கலை இலக்கியவட்ட விருதினை 2003இலும் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 76