ஆளுமை:பசுபதிப்பிள்ளை, வ.
பெயர் | பசுபதிப்பிள்ளை, வ. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | சமூகசேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வ.பசுபதிப்பிள்ளை அவர்கள் புங்குடுதீவைச் சேர்ந்த ஓர் சமூக சேவையாளர். இவர் முதலில் விதானையாரக கடமை புரிந்து பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிராம சங்க தலைவராகவும் கிராம கோட்டு நீதிபதியாகவும் இருந்து தொண்டாற்றினார்.
இவர் நாட்டின் பல கோணங்களிலும் பல கல்வி நிலையங்கள் தோன்றக் காரணமாகவிருந்தார். அவற்றுள் ஶ்ரீ கணேச வித்தியாசாலை, பராசக்தி வித்தியாசாலை போன்றவற்றை தமது முயற்சியால் அமைத்து திறம்பட நடத்தினார். கணேச வித்தியாசாலையானது புரட்டாஸ்தாந்து மதப் பாடசாலைகள் எழுச்சி பெற்றிருந்த காலத்தில் சைவப் பெருமக்கள் பலரது ஒத்துழைப்புடன் பெரியார் நீ.அம்பலவாணர் அவர்களது வளவில் 1910 ஆம் ஆண்டு முதன் முதலாக நிறுவப்பட்ட பாடசாலையாகும். தொடர்ந்து அந்த காலத்திலேயே 1914ஆம் ஆண்டு ஆவணி வரை அரச நன்கொடை இன்றி சொந்த முயற்சியில் இந்த பாடசாலையை நடத்தி வந்தார். புங்குடுதீவின் கல்வி வளர்ச்சிக்குப் பங்காற்றியவர்களில் இவர் முதலிடம் பெறுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 203-205