ஆளுமை:நல்லதம்பி, ஐயம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:58, 3 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=நல்லதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நல்லதம்பி, ஐயம்பிள்ளை
தந்தை ஐயம்பிள்ளை
பிறப்பு 1888
ஊர் புங்குடுதீவு
வகை வர்த்தகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஐயம்பிள்ளை நல்லதம்பி அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் வர்த்தகர். இவர் முதலில் விவசாயமும் பின்பு வியாபரமும் செய்தவர். 1925ஆம் ஆண்டு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை ஆரம்பித்து பெரும் பணக்காரரானார். இதன் மூலம் பணக்கார நல்லதம்பி எனும் பெயரைப் பெற்றார்.

கிராமத்தின் பொது மக்கள் மட்டுமன்றி கொழும்பு போன்ற நகரத்தில் வர்த்தகம் செய்த பல முதலாளிகளுக்கும் வட்டிக்கு பணம் வழங்கியிருந்தார். வங்கிகள் இல்லாத அந்தக் காலத்தில் இவர்தான் புங்குடுதீவின் கிராமவங்கியாகத் தொழிற்பட்டார்.

இவர் படித்த கணேச வித்தியாலயத்திற்கு மதியபோசனம் வழங்குவதற்கு இவர் பணம் கொடுத்து உதவினார். அத்தோடு கண்ணகை அம்மன் கோயிலின் இரண்டாம் திருவிழாவை செய்து வந்தார். இவ்வாறு பல சமய, சமூக சேவைகளை இவர் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 257-258