ஆளுமை:திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை
நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:07, 8 செப்டம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | திருநாவுக்கரசு |
தந்தை | முத்தையாபிள்ளை |
தாய் | அன்னலட்சுமி |
பிறப்பு | 1920 |
இறப்பு | 1960 |
ஊர் | சீர்காழி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை (1920-1960) தமிழ்நாடு, சீர்காழியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை முத்தையாபிள்ளை; இவரது தாய் அன்னலட்சுமி. இவர் சிறுவயதில் இசை ஆர்வமுடையவராகி வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக் கலைகளை நன்கு கற்றுக் கொண்டார்.
இவரது இசை நுட்பத்திறனை அறிந்த ஈழத்துச் சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக இங்கு அழைத்தார். யாழ்ப்பாணம், அளவெட்டியில் பல காலம் வசித்து வந்த இவர் பல இடங்களிலும் இந்து ஆலயங்கள் தோறும் மங்கல இசை அரங்குகளில் பங்குபற்றினார்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 58-60