ஆளுமை:திருஞானசம்பந்தப்பிள்ளை, மாரிமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருஞானசம்பந்தப்பிள்ளை, மு.
தந்தை மாரிமுத்து
பிறப்பு
ஊர் வேலணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு.திருஞானசம்பந்தப்பிள்ளை அவர்கள் வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். பண்டிதை தம்பு வேதநாயகி வித்துவான் பி.சிவப்பிரகாசம் ஆகியோரிடம் கல்வி பயின்ற இவர் சித்தாந்த பண்டிதர், சைவப்புலவர் பரீட்சைகளில் சித்தியடைந்து தங்கப்பதக்கங்களை பெற்றவர். இவர் இணுவில் மத்திய கல்லூரியில் அதிபராக பணிபுரிந்துள்ளார்.

இலங்கை வானொலியில் சைவநற் சிந்தனைகளை வழங்கியவர். சமயம் சார் கட்டுரைகளையும் எழுதி வருகின்றார். இவரால் எழுதப்பட்ட சைவசித்தாந்த விளக்கம் என்ற நூல் யாழ்.சைவசித்தாந்த வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டதோடு சிதம்பரத்தில் நடைப்பெற்ற சைவசித்தாந்த மாநாட்டிலும் சைவ இளைஞர் மாநாட்டிலும் சொற்பொழிவாற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 21