ஆளுமை:தம்பித்துரை, தம்பன்
நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:46, 20 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தம்பித்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | தம்பித்துரை |
தந்தை | தம்பன் |
பிறப்பு | 1950.09.02 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தம்பித்துரை, தம்பன் (1950.09.02 - ) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை தம்பன். இவர் கொ. அகத்தியன், சி. கந்தையா, வெ. செல்லையா போன்றோரிடம் நடிப்பு, நாடகம், சிந்துநடைக் கூத்து போன்ற கலைகளைப் பயின்று 1962ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார். மகுடம் காத்த மன்னன், சத்தியவான் சாவித்திரி, ஆகிய நாடகங்களை இவர் நெறியாள்கை செய்துள்ளார்.
இவரது கலைத்திறமைக்காக இயக்குனர் திலகம், கலாமணி, கலைவேந்தன் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 178