ஆளுமை:ஜோர்ஜ் ஜீவரெத்தினம், காத்தமுத்து

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:57, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜோர்ஜ் ஜீவர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜோர்ஜ் ஜீவரெத்தினம், காத்தமுத்து (ஜீவா ஜீவரெத்தினம்)
தந்தை காத்தமுத்து
தாய் சின்னத்தங்கம்
பிறப்பு 1939.11.23
இறப்பு 1977.10.20
ஊர் துறைநீலாவணை, மட்டக்களப்பு
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜீவா ஜீவரெத்தினம் எனும் புனை பெயர் கொண்ட ஜோர்ஜ் ஜீவரெத்தினம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கேயுள்ள துறைநீலாவணையில் 1939 நவம்பர், 23ம் திகதி காத்தமுத்து, சின்னத்தங்கத்தின் மகனாக பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை துறைநீலாவணை மெ. மி. பாடசாலையிலும், மட்டக்களப்பு அரசினர் மத்திய கல்லூரியிலும் பெற்றுக்கொண்ட இவர் உயர் கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும், மேற்படிப்பை நல்லூர் அரசினர் ஆசிரிய கலாசாலையிலும் பெற்றுக் கொண்டார்.

மலையகத்தில் பதுளை போன்ற பல இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் ஒரு விளையாட்டு வீரரும் ஆவார். 50களின் பிற்பகுதியில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். வாழும் கவிதை என்னும் ஒரு கவிதை நூல் 60களின் பிற்பகுதியில் வெளிவந்தது.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 105-108


வெளி இணைப்பு