ஆளுமை:சோமசேகரம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசேகரம், சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மணிசேகரன் என்ற புனைபெயரைக் கொண்ட சுப்பிரமணியம் சோமசேகரம் அவர்கள் வேலணை, சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். வரி மதிப்பீட்டுத் திணக்கள அலுவலகராக இருந்த இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார்.

இவர் கொழும்பில் பணியாற்றிய போது தமிழமுது" எனும் மாத கலைக்களஞ்சிய இதழொன்றினை வெளியிட்டுவந்தார். இவ்விதழானது பல பிரபல எழுத்தாளர்களுக்கும் புதிய எழுத்தாளர்களுக்கும் களமாக அமைந்தது. பின்னர் ஓய்வு பெற்று ஊர் திரும்பியடும் தாரணி அச்சகம் ஒன்றை நிறுவி தாரணி என்ற மாத இதழ் ஒன்றினையும், செய்திச்சுடர் என்ற புதினத்தாள் ஒன்றையும் நடத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 23