ஆளுமை:சோமசுந்தரம், நாகலிங்கம்
பெயர் | சோமசுந்தரம், நாகலிங்கம் |
தந்தை | நாகலிங்கம் |
தாய் | விஜயம் |
பிறப்பு | 1895 |
இறப்பு | 1955 |
ஊர் | புத்துவாட்டி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நா. சோமசுந்தரம் (1895 - 1955) யாழ்ப்பாணம், புத்துவாட்டியைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர். இவரது தந்தை நாகலிங்கம்; தாய் விஜயம். இவர் வயலின் இசைக் கருவியைப் பயின்றதோடு மட்டுமன்றி சாரங்கி எனும் கருவியையும் தந்தையாரிடம் பயின்றார். தனது பதினோராவது வயதில் இசையரங்குகளில் பங்களிப்பு செய்ய ஆரம்பித்த இவர் 1900ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் முதன் முதலாக இசை அரங்குகளில் வயலின் இசை பயன்படுத்தப்பட்ட போது வைத்தீஸ்வரகுருக்கள், பரமேஸ்வரஐயர், சங்கரசுப்பையா போன்ற இசையறிஞர்களின் இசையரங்குகளில் இவர் வயலின் வாசித்துள்ளார்.
சோமசுந்தரம் அவர்கள் இசைச்சேவையின் பொருட்டு யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையிலும் வசித்து வந்தார். ஈழத்தில் இவரிடம் வயலின், வாய்ப்பாட்டு என்பன பயின்ற வாரிசுகள் பலர் பெரும் பிரபலம் பெற்று விளங்கினார்கள். நடன நாடகக்கலைஞர் கீதாஞ்சலி நல்லையாவும் இவரது மாணாக்கரே. இவர் தெய்வங்கள் மீது கீர்த்தனைகள், தில்லானா போன்றவைகள் இயற்றிப் பாடியும் வாசித்துமுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 13-17