ஆளுமை:செபமாலை, செபஸ்தியான்
பெயர் | செபமாலை |
தந்தை | செபஸ்தியான் |
தாய் | செபமாலை |
பிறப்பு | 1940.03.08 |
ஊர் | மன்னார் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செபமாலை, செபஸ்தியான் (1940.03.08 - ) மன்னார், முருங்கனைச் சேர்ந்த எழுத்தாளர்; நாடகக்கலைஞர். இவர் குழந்தை செபமாலை எனும் பெயரில் நன்கு அறியப்படுபவர். இவரது தந்தை செபஸ்தியான்; தாய் செபமாலை. இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டுக்கூத்து, மரபு நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைநாடகங்கள், நாடக நெறியாள்கை, கவிதை, பாடல் போன்ற பல்துறைகளிலும் கலையாற்றல் மிக்கவர். இன்பத்தமிழின் இதய ஓலம், அறப்போர் அறை கூவல், இயாகப்பர் இன்னிசைப் பாடல்கள், பரிசு பெற்ற நாடகங்கள், மரபுவழி நாடகங்கள், மாதோட்டம் முதலான நூல்களை எழுதியுள்தோடு பணத்திமிர், பாட்டாளிக்கந்தன், இறைவனின் சீற்றம், தாரும் நீரும், புதுமைப்பெண், தாகம் முதலான நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார்.
இவர் தனது படைப்பாற்றலுக்காய் 1998ஆம் ஆண்டு சாகித்திய விருது, கலாபூசண விருது, ஆளுனர் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 1858 பக்கங்கள் 11-16
- நூலக எண்: 13958 பக்கங்கள் 205-207
- நூலக எண்: 3225 பக்கங்கள் 04-05