ஆளுமை:சுப்பிரமணியம், கே. கே.

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:11, 9 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணியம், கே. கே.
பிறப்பு 1929.10.06
ஊர் காரைநகர்
வகை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கே. கே. சுப்பிரமணியம் 1929.10.06ல் காரைநகரில் பிறந்தார். காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற இவர் நாற்பது ஆண்டு காலம் இலங்கைச் சுங்க இலாகாவிலும். 5 ஆண்டுகள் இலங்கை முதலீட்டுச் சபையிலும் பணி புரிந்தவர்.

சுங்க இலாகாவில் பணி புரியும் போது கலைஞர்கள், பேச்சாளர்கள்,சமய பெரியார்களுடன் நெருங்கிய உறவை வளர்த்துக் கொண்டார். அதேபோல ஓய்வு பெற்ற பின்பும் உலகச் சைவப் பெரியார்கள், சிவாச்சாரியார்கள், இசை அறிஞர்கள், தமிழ்ச் சான்றோரின் அன்பையும் நட்பையும் பெற்று தமிழையும் சைவத்தையும் இசையையும் வளர்த்தார்.

இதன் பயனாக சமாதான நீதிபதி, இரசிக கலாமணி, அருள்நெறித் தொண்டர், பரோபகாரமணி, சிவதர்ம சுரபி முதலிய விருதுகளைப் பெற்றார். காரைநகர் சைவமகாசபை, மணிவாசக சபை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.

வளங்கள்

  • நூலக எண்: 3769 பக்கங்கள் 346