ஆளுமை:சிவராஜா, வயிரமுத்து

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவராஜா
தந்தை வயிரமுத்து
தாய் தங்கம்மா
பிறப்பு 1953.08.31
ஊர் நாவற்குழி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவராஜா, வயிரமுத்து (1953.08.31 - ) யாழ்ப்பாணம், நாவற்குழியைச் சேர்ந்த எழுத்தாளர்; பத்திரிகையாளர்; சமூகசேவையாளர். இவரது தந்தை வயிரமுத்து; தாய் தங்கம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியையும் உயர் கல்வியையும் யாழ்ப்பாணம் நாவற்குழி மாகா வித்தியாலயத்தில் கற்றார். 1973ஆம் ஆண்டு முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் பகுதி பல கூட்டுறவு சங்கத்தின் பொது இலிகதராக வேலையில் சேர்ந்து கொண்ட இவர் கணக்குலிகிதர் பதவியின் பின் பிரதம கணக்காளராக 1983ஆம் ஆண்டு வரை கடமைபுரிந்தார். பின்னர் இவர் ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து சென்றார்.

1975ஆம் ஆண்டு எழுத்துத்துறையில் ஈடுபட்ட இவர் யாழ்ப்பாண ஈழநாடு பத்திரிகையின் முல்லைத்தீவு மாவட்ட நிருபராக கடமைபுரிந்தார். இவர் ஜேர்மனியிலும் தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்து 1985 - 1990 வரை தமிழ் பாடசாலைகளின் ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் கல்விப் பணி ஆற்றினார். இவர் 'மண்' என்ற கல்வி, கலை, இலக்கிய சமூக இதழ் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார். கவிதை, சிறுகதை கட்டுரைகளை எழுதியுள்ள இவர் 2002ஆம் ஆண்டில் தனது 50சிறுகதைகளை உள்ளடக்கிய "கல்லறைப்பூக்கள்" என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 70-75
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 24-28