ஆளுமை:சின்னத்துரை ஐயர்(சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள்), நாகலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்துரை ஐயர்
தந்தை நாகலிங்கம்
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னத்துரை ஐயர் என்றழைக்கப்படும் சமஸ்கிருத பண்டிதர் சிவஶ்ரீ கணேசராஜக் குருக்கள் புங்குடுதீவை சேர்ந்தவர். இவர் புங்குடுதீவில் பல வருடங்கள் வாழ்ந்து சமய சமூகக் கிரியைகளை நடத்தி வந்தார். இவரது முயற்சியால் பல ஆலயத் திருப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு கும்பாபிஷேகம் கண்டுள்ளன.

இவரது சேவை புங்குடுதீவு துறைமுக வாசலிலுள்ள மடத்துவெளிப் பிள்ளையார் கோவில் முதல் அனைத்து கோவில்களிலும் அவ்வப்போது தேவைக்கேற்ப தன்னால் முடிந்தவரை தயங்காது பணிபுரிந்து அனைவரது நன்மதிப்பையும் பெற்று வாழ்ந்தார். இவர் மட்டுமன்றி இவரது குடும்பத்தாரும் பல வழிகளில் சமயத் தொண்டு ஆற்றி வருகின்றனர்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 133