ஆளுமை:சற்குருநாதன், நடராசா

நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:30, 23 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சற்குருநாதன், நடராசா
தந்தை நடராசா
பிறப்பு 1956.06.03
ஊர் திருநெல்வேலி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந. சற்குருநாதன் (1956.06.03 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த சிற்பக் கலைஞர். இவரது தந்தை நடராசா. இவர் தர்ஷிகா கலைக்கூடம் எனும் நிறுவனத்தினை தனது வாழ்விடமான அரசடி ஒழுங்கை, திருநெல்வேலி கிழக்கில் அமைத்து சிற்பத் தொழிலை மேற்கொண்டு வந்துள்ளார்.

சித்திரத்தேர்கள், கைலாய வாகனங்கள், திருமஞ்சங்கள் பலவற்றை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல பகுதிகளிலுமுள்ள சைவாலயங்களுக்கு இவர் உருவாக்கிக் கொடுத்துள்ளார். 1999ஆம் ஆண்டு அளவெட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் தேவஸ்தானம் இவரின் கலைப்பணியைப் பாராட்டி கலைஞானச்சுடர் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது. மேலும் நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவை கலைஞானச்சுடர் விருது வழங்கி கௌரவித்தது. திருநெல்வேலி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் நிர்வாகம் இவரின் அளப்பரிய கலைப்பணிக்காக இவரைப் பாராட்டிக் கௌரவித்ததோடு சிற்பஜோதி பட்டமும் வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 209