ஆளுமை:சபாநாயகம், சரவணமுத்து

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:42, 2 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சபாநாயகம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சபாநாயகம்
தந்தை சரவணமுத்து
பிறப்பு 1928.07.22
ஊர் மல்லாகம்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சபாநாயகம், சரவணமுத்து (1928.07.22 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த ஓவியர். இவரது தந்தை சரவணமுத்து. இவர் ஓவியக் கலையை சென்னையிலுள்ள அரசினர் சிற்ப ஓவிய கலை கலாசாலையில் பயின்று ஓவியக் கலையின் முதல் தர டிப்ளோமா சான்றிதழை பெற்றார்.

1953இல் வீரகேசரி தமிழ் பத்திரிகையில் ஓவியராக சேவையை ஆரம்பித்து 8 ஆண்டுகளுக்கு மேலாக கடமையாற்றியுள்ள இவர் தினகரன் வார மஞ்சரி பத்திரிகையில் நீண்ட கால பகுதிநேர ஓவியராகப் பணியாற்றியுள்ளார். மேலும் 2008இல் ஓவிய தரிசனம் என்ற இறுவெட்டினையும் வெளியிட்டுள்ளார். 1997இல் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 242