ஆளுமை:சண்முகம், சி.
நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:49, 15 சூன் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சண்முகம், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
பெயர் | சண்முகம், சி. |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி. சண்முகம் இலங்கை வானொலிக் கலைஞரும், நாடகாசிரியரும் ஆவார். இவர் வானொலி அறிவிப்பாளர் இராஜேஸ்வரி சண்முகத்தின் கணவர் ஆவார். யாழ்ப்பாணம், புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் 1955 ஆம் ஆண்டில் இலங்கை வானொலியில் தட்டெழுத்தாளராகப் பணியாற்றிய போது நாடகத் துறையில் இவருக்கு நாட்டம் ஏற்பட்டது. இந்த ஆர்வத்தை இவருக்கு ஊட்டியவர்கள் சானா (சண்முகநாதன்), மற்றும் பொன்மணி குலசிங்கம் ஆகியோர் ஆவர். 1956 ஆம் ஆண்டு அரசாங்க சேவையில் சேர்ந்து சிறு கைத்தொழில் திணைக்களத்தில் 22 ஆண்டுகளும், சுற்றுலா, கிராமியத் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 323