ஆளுமை:கெங்காதரன், மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கெங்காதரன், மயில்வாகனம்
தந்தை மயில்வாகனம்
பிறப்பு 1910.02.01
இறப்பு 1994
ஊர் நல்லூர்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம. கெங்காதரன் (1910.02.01 - 1994) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த ஓவியக் கலைஞர். இவரது தந்தை மயில்வாகனம். யாழ்ப்பாணம் பரமேஸ்வராக் கல்லூரி இயங்கிய காலத்தில் ஆசிரியராக இருந்த எஸ். ஆர். கனசபை அவர்களிடம் ஓவிய நுணுக்கங்களைப் பயின்ற இவர் கண்ணாடி ஓவியம், கோவில் திரைச் சீலைகள், சுவர் சித்திரங்கள் வரைவதில் திறமை மிக்கவராக விளங்கினார். கொழும்பு தொழில் நுடபக் கல்லூரியிலும் பயிற்சி பெற்று திருநெல்வேலி சைவ ஆசிரியர் கலாசாலையில் சிலகாலம் போதனாசிரியராக பணியாற்றி பின் அப்பதவியைத் துறந்து சுயமாக தன் ஜீவனோபாயத் தொழிலாக இக் கலையை மேற்கொண்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற நல்லூர் கோபுர வாயில், நீர்வேலிக் கந்தசாமி கோயில் தேர்முட்டி, கோப்பாய் கந்தசுவாமி கோவில் சுவரோவியங்கள் ஆகியன இவரின் கலை வெளிப்பாடுகளாகும்.

முன்னாள் பிரதமர் கௌரவ பண்டாரநாயகாவினால் 1956ஆம் ஆண்டு இவர் வெள்ளிப்பதக்கம் வழங்கி கௌரவிகப்பட்டுள்ளார். 1997ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் சோ.கிருஷ்ணராஜா அவர்களால் எழுதப்பட்ட தற்கால யாழ்ப்பாணத்து ஓவியர்கள் என்ற நூலில் இவர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 183