ஆளுமை:கதிரவேலு, இரத்தினசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கதிரவேலு| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கதிரவேலு
தந்தை இரத்தினசாமி
பிறப்பு 1942.06.24
ஊர் ஊர்காவற்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கதிரவேலு, இரத்தினசாமி (1942.06.24 - ) யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இரத்தினசாமி. இவர் குஞ்சுபகவதர், எஸ். மகேந்திரன், அ. அருளப்பர், தாமோதரம்பிள்ளை ஆகியோரிடம் நாடகக் கலையைப் பயின்று 1960ஆம் ஆண்டிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

இவர் கொழும்பு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும், ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம் போன்ற ஒலிபரப்பு நிலையங்களிலும் இசைக் கருவிகளை வாசித்து வந்ததோடு பண்டார வன்னியன் போன்ற நாட்டுக்கூத்துக்களை நடித்தும் வந்துள்ளார்.

2002ஆம் ஆண்டில் ஊர்காவற்துறை கலாசாரப் பேரவையால் கலைஞான வித்தகர் எனும் பட்டம் வழங்கப்பட்டு இவர் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 140