ஆளுமை:எலியேசர், ஜெயரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:51, 17 பெப்ரவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=எலிசேயர்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் எலிசேயர்
தந்தை ஜெயரத்தினம்
பிறப்பு 1918.06
ஊர் அல்வாய்
வகை கணித மேதை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

எலிசேயர், ஜெயரத்தினம் (1918.06 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த கணித மேதை. இவரது தந்தை ஜெயரத்தினம். இவர் கொழும்பு St. Joseph's கல்லூரியில் இடைநிலை பயிற்சியில் தேறி பின்னர் கணித விஞ்ஞான மாணி கற்கை நெறியை கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியில் கற்று முதலாம் வகுப்பில் சித்திப்பெற்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புலமைப் பரிசிலைப் பெற்றுக் கொண்டார். அங்கு The Interaction Between Electrons and an Electromagnetic Field என்ற தலைப்பில் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.

பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராக சேர்ந்து காலப்போக்கில் குறிப்பாக தனது முப்பத்தோராவது வயதில் கணிதவியல் பேராசிரியராக நியமனம் பெற்றார். கணிததுறையில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்களையும் இவர் எழுதியுள்ளார். மேலும் 1950ஆம் ஆண்டளவில் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடாதிபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 1959களில் மலேசியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.

எட்டு வருடங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் பதின்மூன்று வருடங்கள் இலங்கைப் பல்கலைக்கழகத்திலும் ஒன்பது வருடங்கள் மலேசியப் பல்கலைக்கழகத்திலும் பதினாறு வருடங்கள் அவுஸ்திரேலியாவிலுள்ள Latrobe பல்கலைக்கழகத்திலும் கணிதவியற்துறையில் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் பணியாற்றிய பெருமை இவருக்கே உரியதாகும். மேலும் வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளார் ஆரம்பித்த உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஸ்தாபகர்களில் முன்னணியில் இவர் நின்றதோடு அவுஸ்திரேலியாவில் தமிழ்ச்சங்கம் ஒன்றை ஸ்தாபித்தவரும் இவராவார்.

வெளி இணைப்புக்கள்

எலிசேயர், ஜெயரெத்தினம் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்


வளங்கள்

  • நூலக எண்: 11850 பக்கங்கள் 70-74