ஆளுமை:இராமலிங்கம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராமலிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராமலிங்கம்
தந்தை சுப்பிரமணியம்
பிறப்பு 1940.06.28
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமலிங்கம், சுப்பிரமணியம் (1940.06.28 - ) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம். இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலனி சைவ வித்தியாசாலையிலும், உயர்கல்வியை சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பயின்றார். வலிகாமம் வடக்கு கலாசாரப் பேரவை வலயம் 2 இல் உப தலைவராகவும், யாழ்ப்பாண மாவட்ட கலை கலாசாரப் பேரவையில் ஆயுட்கால உறுப்பினராகவும், செயற்குழு உறுப்பினராகவும் இவர் கடமையாற்றியுள்ளார்.

தனது இருபதாவது வயதில் இலங்கை காவல் துறையில் தொழிலை ஆரம்பித்த இவர் தனது முயற்சியினால் அரசாங்கத்தின் அனுமதியுடன் கலையை வளர்ப்பதற்கு உதவினார். அமரர் நைநார், லால் முதலியோரிடம் தொடர்பு கொண்டு அவர்கள் மூலமாக சொன்னதைச் செய்வேன் நாடகத்தை அரங்கேற்றினார். இந் நாடகமானது கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹற்றன், பலாங்கொடை போன்ற இடங்களில் மேடையேற்றப்பட்டது.

இவரது கலைச்சேவைக்காக இலங்கைக் கலைக்காவலர் என்ற பட்டம் 1974ஆம் ஆண்டு கிங்ஸ்லி செல்லையாவின் ஆனந்தா புரொடெக்‌ஷனால் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 133-134