ஆளுமை:உஷாதேவி, செல்வச்சோதி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 13 ஜனவரி 2016 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=உஷாதேவி செல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் உஷாதேவி செல்வச்சோதி
பிறப்பு 1961.05.15
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உஷாதேவி செல்வச்சோதி (1961.05.15 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவருக்கு கிராமியப் பாடல், நாடகம், கவிதை எழுதுதல், கிராமிய நடனம், வில்லுப்பாட்டு போன்ற துறைகளில் நாட்டம் உள்ள காரணத்தினால் கலாபூஷணம் வீ. கே. பாலசிங்கம் அவர்களிடம் பயின்று சிறு வயதிலிருந்து கலைப்பணி ஆற்றி வந்துள்ளார்.

ஶ்ரீவள்ளி, காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, கோவலன் கண்ணகி, பாஞ்சாலி சபதம், பரதன் போன்ற நாடகங்களை நடித்துள்ள இவர் மேலும் சமரபாகு நியூட்டன் நாடகமன்ற உறுப்பினராக இருந்ததோடு தமிழ்த்தின விழாவிற்கும் பரிசளிப்பு விழாவிற்கும் பாடசாலைகளில் நாடகங்களையும் கிராமிய நடனங்களையும் பழக்கி வந்துள்ளார்.

இவரது திறமைக்காக உழைக்கும் மகளிர் அபிவிருத்தி நிறுவனம் கலைச்செல்வி எனும் பட்டமளித்து இவரை கௌரவப்படுத்தியது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 136