ஆளுமை:செந்திநாதன், கனகசபை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செந்திநாதன்
தந்தை கனகசபை
தாய் பொன்னம்மா
பிறப்பு 1916
ஊர் குரும்பசிட்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்திநாதன், கனகசபை (1916 - ) யாழ்ப்பாணம், குரும்பசிட்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசபை; தாய் பொன்னம்மா. இவர் குரும்பசிட்டி மகாதேவா வித்தியாசாலையிலும், பின்னர் திருநெல்வேலி முத்துத்தம்பி வித்தியாசாலையிலும் கல்வி கற்றார். ஈழகேசரி பத்திரிகையில் இவரது ஆக்கங்கள் பல வெளிவந்தன. 25க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் 4 புதினங்களையும், 12 நாடகங்களையும் இவர் எழுதியுள்ளார்

கரவைக்கவி கந்தப்பனார், யாழ்பாடி, இலக்கிய மாணவன், வேல், பரதன், உபகுப்தன் எனும் புனைப்பெயர்களைக் கொண்ட இவர் வெண்சங்கு என்ற சிறுகதையையும் ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற ஆய்வு நூலையும் வெறும் பானை, விதியின் கை ஆகிய நாவல்களையும் ஒருபிடி சோறு என்ற நாடகத்தையும் எழுதியுள்ளார்.

1964ல் கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கத்தினால் இரசிகமணி, 1969ல் அம்பனை கலைப் பெருமன்றம் இலக்கிய செல்வர் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 62-64
  • நூலக எண்: 4428 பக்கங்கள் 487
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 58-65
  • நூலக எண்: 16488 பக்கங்கள் 48-51
  • நூலக எண்: 10194 பக்கங்கள் 28-31