ஆளுமை:யோகநாதன், செ.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகநாதன்
பிறப்பு 1941.10.01
இறப்பு 2008.01.28
ஊர் கொழும்புத்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகநாதன், செ. (1941.10.01 - 2008.01.28) யாழ்ப்பாணம், கொழும்புத்துறையில் பிறந்த எழுத்தாளர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றார். கண்டியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். பின்னர் இலங்கை நிர்வாக சேவையில் இனைந்து மட்டக்களப்பு, பூநகரி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகக் கடமையாற்றினார்.

இவர் பெருமளவு சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எழுதியுள்ளார். யோகநாதன் கதைகள் (1964), ஒளி நமக்கு வேண்டும் (1973), காவியத்தின் மறுபக்கம் (1977), வீழ்வேன் என்று நினைத்தாயோ? (1990), அன்னைவீடு (1995), கண்ணில் தெரிகின்ற வானம் (1996), அசோகவனம் (1998) போன்றவை இவரது நூல்கள். இவரது படைப்புக்களுக்கு இரு தடவைகள் சாகித்திய மண்டல பரிசைப் பெற்றுள்ளதோடு தமிழக அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 300 பக்கங்கள் 170-171
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 52
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 138-140
  • நூலக எண்: 15514 பக்கங்கள் 247-252
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:யோகநாதன்,_செ.&oldid=174699" இருந்து மீள்விக்கப்பட்டது