ஆளுமை:பாவலர் துரையப்பாபிள்ளை, அருளம்பலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாவலர் துரையப்பாபிள்ளை
தந்தை அருளம்பலம்
தாய் தங்கம்மா
பிறப்பு 1872.10.12
இறப்பு 1929
ஊர் தெல்லிப்பளை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாவலர் துரையப்பாபிள்ளை (அருளம்பலம். துரையப்பாபிள்ளை) அவர்கள் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் பிறந்த ஓர் கவிஞன் ஆவார். இவர் தனது ஆரம்பக்கல்வியை தெல்லிப்பளை ஆங்கில வித்தியாலயத்திலும் மேற்படிப்பை வட்டுக்கோட்டை செமினரியிலும்(வட்டுக்கோட்டை சர்வசாத்திரக் கல்லூரி) பயின்றார். 1890ஆம் ஆண்டு கேம்பிரிஜ் உயர் நிலைப் பள்ளி இறுதித் தேர்வில் சித்தியெய்தியபின் சிறிதுகாலம் அரச சேவையில் பணியாற்றி அதனை துறந்து பாணந்துறை தூய யோவான் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார்.

பம்பாய் மாநிலத்திலுள்ள கோலாலம்பூர் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய் காலத்தில் இவரது ஆளுமையும் முற்போக்கு சிந்தனைகளும் விருத்திபெற்றன. 1900ஆம் ஆண்டு தெல்லிப்பளை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் அதிபரானார். இவருடைய கன்னிப்படைப்பாகிய கீதரச மஞ்சரி என்னும் நூல் 1901ஆம் ஆண்டில் வெளிவந்தது. 1910ஆம் ஆண்டு அமெரிக்க மிஷனரிமாருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தலைமை ஆசிரியர் பதவியை துறந்து அதே ஆண்டு மகாஜனக் கல்லூரியை ஆரம்பித்தார்.

1921ஆம் ஆண்டு இந்துசாதன பத்திரிகையின் ஆங்கில உதவிப்பத்திராதிபராக நியமிக்கப்பட்டு 1924இல் பிரதம பத்திராதிபரானார். இவரது இலக்கிய நோக்கும் கவிதையில் நவீனத்துவமும் ஈழத்தில் பின்வந்த பல கவிஞர்களுக்கு தடமாய் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 76
  • நூலக எண்: 2569 பக்கங்கள் 1-19

வெளி இணைப்பு