ஆளுமை:வரதராசா, பிள்ளைநாயகம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வரதராசா
தந்தை பிள்ளைநாயகம்
பிறப்பு 1954.03.04
ஊர் காங்கேசன்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வரதராசா, பிள்ளைநாயகம் (1954.03.04 - ) யாழ்ப்பாணம் காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை பிள்ளைநாயகம். இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் முகாமையளராக பணியாற்றிய இவர் இசை நாடகத் துறையிலும் வாத்தியக் கருவிகளை இசைப்பதிலும் கைதேர்ந்தவர்.

சிறுவயது முதல் காங்கேசன்துறை வசந்தகான நாடக சபாவில் இணைந்து பல இசை நாடகங்களில் நடித்துள்ளதோடு நாடகக் கலாநிதி அமரர் வி. வி. வைரமுத்து அவர்களுடன் இணைந்து ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் அரங்கில் இசை நாடகக் காட்சிகளில் நடித்துள்ளார். இந் நாடகம் பல தடவைகள் ரூபவாஹினியில் ஒளிபரப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஈழத்தின் பிரபல இசைக் குழுக்களான இராஜன் இசைக்குழு, சாரங்கா இசைக்குழு ஆகியவற்றின் பல்துறை இசைக் கலைஞராக திகழ்ந்த இவர் தபேலா சக்ரவர்த்தி எனும் பட்டத்தை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 180
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 113