ஆளுமை:சின்னராசா, பண்டாரம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:03, 10 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னராசா| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னராசா
தந்தை பண்டாரம்
பிறப்பு 1934.07.18
ஊர் மயிலிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னராசா, பண்டாரம் (1934.07.18 - ) யாழ்ப்பாணம் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை பண்டாரம். எஸ். எஸ். சி. இல் தமிழிலும் ஆங்கிலத்திலும் சித்தியைந்த இவர் முதன் முதலாக வித்துவான் தம்பிராசா அவர்களிடமும் பின் 08 வருடங்கள் ஏ. எஸ். ராமநாதன் அவர்களிடமும் மிருதங்கம் தொடர்பான கலை அறிவைப் பயின்று தனது 12ஆவது வயதிலிருந்து கலை பணி ஆற்றி வந்துள்ளார்.

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பகுதி நேர விரிவுரையாளராகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைக்கழகத்தில் முன்னாள் விரிவுரையாளராகவும், பரீட்சைப் பரிசோதகராகவும் இவர் கடமையார்றியுள்ளதோடு வட இலங்கை சங்கீத சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழக நுண்கலைப்பீட இசைத்துறைப் பரீட்சகராகவும், இணுவில் இசைத்தொண்டர் சபையில் மிருதங்க ஆசிரியராகவும் இவர் கடமையாற்றியுள்ளார். விநாயகர் மகத்துவம் என்னும் நூலும் பல்லவி அமுதம் எனும் நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளன.

இவர் கலாபூஷணம், மத்தளக்கலைச்சுடர், கலாவித்தகர், லயஞானசுரபி, லயஞானபானு, கலைஞானகேசரி, சங்கீத ரத்தினம், கலாபமணி, கலைச்சுடர் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 103