ஆளுமை:சத்தியசீலன், துரைச்சாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:14, 9 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சத்தியசீலன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சத்தியசீலன்
தந்தை துரைச்சாமி
பிறப்பு 1958.01.31
ஊர் அளவெட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சத்தியசீலன், துரைச்சாமி (1958.01.31 - ) யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவரது தந்தை துரைச்சாமி. இவர் தனது 11ஆவது வயதில் ஏ. சி. சின்னராசாவிடம் ஆரம்பக் கல்வியைக் கற்று அதன் பின் சந்தான கிருஷ்ணனிடமும், என். கே. கணேசனுடனும் இணைந்து பல கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

இவர் பல மூத்த கலைஞர்களுடன் இணைந்து வாசித்ததன் காரணமாக தனது 20ஆவது வயதில் தானே தலமை வகித்து பல கலைஞர்களை இணைத்து சத்தியநாதன் குழு என்ற பெயருடன் நல்லூர் சட்டநாதர் வீதி இளங்கலைஞர் மண்டபம், சாவகச்சேரி துர்க்கை அம்மன் கோவில், காரைநகர் சிவன் கோவில், மீசாலை மாவடிப் பிள்ளையார் கோவில், பன்றித்தலைச்சி அம்மன் கோவில், கோப்பாய் கந்தசாமி கோவில் போன்ற பல இடங்களில் நாதஸ்வர கச்சேரிகளை நடாத்தியுள்ளார்.

இவரது கலைச்சேவையின் நிமித்தம் நாதஸ்வர சக்ரவர்த்தி, செந்தமிழ் வள்ளல், கான கலா பூஷணம் போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 87