ஆளுமை:சரஸ்வதி, கோபாலசாமி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:30, 7 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சரஸ்வதி கோப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சரஸ்வதி கோபாலசாமி
பிறப்பு 1934.04.01
ஊர் பன்னாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சரஸ்வதி கோபாலசாமி (1934.04.01 - ) யாழ்ப்பாணம், தெல்லிப்பளை, பன்னாலையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையைச் வசிப்பிடமாகவும் கொண்ட இசைக் கலைஞர். இவர் தெல்லிப்பளை பிரம்மஶ்ரீ விஸ்வநாத ஐயர், உடுவில் இசைப்புலவர் சண்முகரத்தினம், கொல்லங்கலட்டி இசைமணி செல்லத்துரை, சங்கீத வித்துவான் சித்திவிநாயகர் ஆகியோரிடம் இசைப் பயின்றார். இவர் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

இவர் 1957ஆம் ஆண்டு யாழ்ப்பாண வீரசிங்க மண்டபம், 1958ஆம் ஆண்டு யாழ்ப்பாண திறந்தவெளி அரங்கு, 2000ஆம் ஆண்டு வடமராட்சி வடக்கு பிரதேச கலாசாரப் பேரவை ஆகிய இடங்களில் இவர் தனது இசைக்கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

சங்கீத கலாவித்தகர், பண்ணிசைத்திலகம், கலாபூஷணம் ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.


வளங்கள்

{{வளம்|15444|60}