ஆளுமை:ஞானமூர்த்தி, சண்முகம்பிள்ளை
பெயர் | ஞானமூர்த்தி |
தந்தை | சண்முகம்பிள்ளை |
தாய் | அன்னப்பிள்ளை |
பிறப்பு | 1905.10.01 |
ஊர் | வல்வெட்டித்துறை |
வகை | சமூக சேவையாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சண்முகம்பிள்ளை ஞானமூர்த்தி (1905.10.01 - ) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சமூகசேவையாளர். இவரது தந்தை சண்முகம்பிள்ளை; தாய் அன்னப்பிள்ளை. ஆரம்பக்கல்வியை வல்வை அ.மி.த.க. பாடசாலையிலும், உயர்கல்வியைச் சிதம்பராக் கல்லூரியிலும் பயின்றார். 1924 அஞ்சல் திணைக்களத்தில் உதவி அஞ்சல் சேவையாளராகச் சேர்ந்து 1951ல் பரிசோதகராக பதவி உயர்வினைப் பெற்று 1963இல் தபால் திணைக்கள உதவி அத்தியட்சகராக நியனம் பெற்றார். 1965இல் அரசசேவையில் இருந்து ஓய்வு பெற்று அதன்பின்னர் வல்லை நூற்றல் நெய்தல் ஆலையில் செயலாளராக நியமனம் பெற்றார்.
இவரது தொண்டு வல்வையிலிருந்து பரந்து யாழ் வரை சென்று யாழ். அரசினர் வைத்தியசாலை மேற்பார்வைக் குழு அங்கத்தவராக இவரை 1966ல் தெரிவு செய்தது. வல்வை சனசமூக சேவா நிலையத்தின் வெள்ளிவிழா கொண்டாடவிருக்கும் விசேட நிர்வாகசபைக்கு தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார். சமாதான நீதிபதியாகக் கடமையாற்றி மக்களின் அன்பைப் பெற்றவர். தமிழர் விடுதலைக் கூட்டணியை உருவாக்கியும் வல்வை நகர முதல்வராகவும் பணிபுரிந்தார். இவர் செல்வச்சந்நிதி கோயிலின் ஆரம்பத் தேர்த்திருவிழா 1925ம் ஆண்டு கட்டுத் தேரொன்றை அமைத்துக் கொடுத்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 4192 பக்கங்கள் 57