ஆளுமை:சுந்தரம்பிள்ளை, நடராசா

நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:41, 5 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pirapakar, ஆளுமை:சுந்தரம்பிள்ளை, ந. பக்கத்தை ஆளுமை:சுந்தரம்பிள்ளை, நடராசா என்ற தலைப்புக்கு வழிமா...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுந்தரம்பிள்ளை, நடராசா.
தந்தை நடராசா
பிறப்பு 1933.10.20
ஊர் அராலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ந.சுந்தரம்பிள்ளை (1933.10.20 - ) யாழ்ப்பாணம் அராலியை பிறப்பிடமாகவும், நீராவியடியை வாழ்விடமாகவும் கொண்ட ஒரு எழுத்தாளர். இவரது தந்தையார் பெயர் நடராசா. இலக்கிய விமர்சன நூல்கள், இலக்கிய வழிகாட்டல், நாடக நூல்கள், நாவல்கள், கற்பித்தல் நுல்கள் எனப் பல நூல்களை எழுதியுள்ள இவர் சிறுகதைகளும் எழுதியுள்ளார். கலைமாணி, கல்வியியல் டிப்ளோமா ஆகிய பட்டங்களை பெற்ற அராலியூர் ந. சுந்தரம்பிள்ளை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இதுவரை நாடகங்கள் ஐந்நூறு வரை எழுதியுள்ள இவர் பன்னிரண்டு நாடகங்களை நூலுருவாக்கியுள்ளார். இலக்கிய விமர்சன நூல்கள் நான்கினையும் இலக்கியம் படைக்க வழிகாட்டும் நூல்கள் மூன்றினையும் இலக்கியம் கற்பிக்க வழிகாட்டும் நூல்கள் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத் தமிழ்ச்சேவை நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போட்டியில் 2000ம் ஆண்டு முதலாம் பரிசும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும், தேசிய ஒருங்கிணைப்பு செலகத்திட்ட பணியகமும் ஒருங்கிணைந்து 1998 ம் ஆண்டு நடாத்திய வானொலி நாடகம் எழுதும் போடடியில் முதலாமிடமும் இவருக்குக் கிடைத்தது.

”முதலாம்பிள்ளை”, எங்கள் நாடு”, ”இமயம்” ஆகிய நாடக நூல்களுக்கு வடக்கு கிழக்கு மாகாண சபையின் பரிசில்கள் இவருக்குக் கிடைத்தன. இமயம் நாடக நூலுக்கு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசும் கிடைத்தது. 2007ம் ஆண்டு இலங்கை வடமாகாண சபையின் ஆளுனர் விருதினையும், 2001ம் ஆண்டு இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் ”கலாபூஷணம்” விருதினையும் இவர் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 18-24
  • நூலக எண்: 7571 பக்கங்கள் 45

வெளி இணைப்புக்கள்