ஆளுமை:சாரல்நாடன், கருப்பையா

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:53, 16 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சாரல்நாடன் (நல்லையா, கருப்பையா)
தந்தை கருப்பையா
தாய் வீரம்மா
பிறப்பு 1944.05.09
ஊர் சாமிமலை, நுவரெலியா
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லையா என்ற இயற்பெயர் கொண்ட சாரல்நாடன் நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா, வீரம்மா ஆகியோருக்கு 1944 மே 9 இல் பிறந்தார். இவர் ஓர் எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், பதிப்பாசிரியாருமாவர்.

சாரல்நாடன் அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது உயர் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்து, பின்னர் ஆசிரியத் தொழிலை விட்டு தேயிலைத் தோட்ட தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றினார்.

இவர் மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் மலையகத் தமிழர், மலையக வாய்மொழி இலக்கியம், மலையகம் வளர்த்த தமிழ், மலைய இலக்கியமும் தோற்றமும் வளர்ச்சியும், பேரேட்டில் சில பக்கங்கள், கண்டிராசன் கதை, புதிய இலக்கிய உலகம், சிந்தையள்ளும் சிவனொளிபாதமலை, இலங்கை மலையகத் தமிழ் இலக்கிய முயற்சிகள் முதலான பல நூல்களை எழுதியுள்ளார்.

இவரது புனைவு நூல்களை விட இவரது ஆய்வு நூல்களே இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல்வெளியீட்டிலும் ஈடுபட்டுள்ளார். சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுள்ளார். இவர் 2014 ஜூலை 31ல் காலமானார்.


வளங்கள்

  • நூலக எண்: 1857 பக்கங்கள் 62-74


வெளி இணைப்புக்கள்