ஆளுமை:பண்ணாமத்துக் கவிராயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:06, 26 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பண்ணாமத்து..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பண்ணாமத்துக் கவிராயர்
பிறப்பு
ஊர் மாத்தளை
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பண்ணாமத்துக் கவிராயர் மாத்தளையைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். இவரது இயற்பெயர் ஸய்யத் முஹமத் ஃபாரூக் என்பதாகும். ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக இலங்கையின் பல பாடாசாலையில் பணிபுரிந்த இவர் 1960 ஆம் ஆண்டு முதல் ஈழத்து கலை இலக்கியத் துறையில் தனது பங்களிப்புகளை வழங்கி வந்துள்ளார்.

இவரது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புக்கள் தாரகை, மலர், பாவை, அக்னி, அலை போன்ற சஞ்சிகைகளிலும், இன்ஸான், செய்தி, தினகரன், வீரகேசரி, திசை, அஷ்ஷூரா போன்ற பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. மேலும் இவரது ஆங்கிலம் மீதான புலமை காரணமாகஅல்லாமா இக்பால், நஸ்ரூல் இஸ்லாம், ஃபைஸ் அஹமத் ஃபைஸ், போன்ற முக்கியமான கவிஞர்களினதும், பாலஸ்தீனக் கவிதைகள் எனப் பல முக்கிய கவிஞர்களினதும், இயக்கங்களினதும் கவிதைகளை தனது சிறப்பான மொழிபெயர்ப்பு மூலம் தமிழுக்கு தந்துள்ளார். காற்றின் மௌனம் இவர் வெளியிட்ட நூலாகும்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 104-107