ஆளுமை:ஞானசேகரன், தியாகராசா
பெயர் | ஞானசேகரன், தியாகராசா |
தந்தை | தியாகராசா |
தாய் | வலாம்பிகை |
பிறப்பு | 1941.04.15 |
ஊர் | புன்னாலைக்கட்டுவன் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தி. ஞானசேகரன் (1941.04.15 - ) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தியாகராசா; தாய் வலாம்பிகை. இவர் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழகம், இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பின் ஒரு டாக்டராக புசல்லாவையில் பணியாற்றினார்.
1964ஆம் ஆண்டு கலைச்செல்வி எனும் சஞ்சிகையின் பிழைப்பு என்னும் தலைப்பில் இவரது முதல் சிறுகதை ஆரம்பமானது. தொடர்ந்து பல சிறுகதைகளை இலங்கையில் வெளிவந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதினார். இதுவரைக்கும் 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், நூலாய்வுகள் என இவர் எழுதியுள்ளார். மேலும் கலாதரிசனம், புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து, அல்சேசனும் ஒரு பூனைக் குட்டியும் போன்ற நூல்களும் ஞானம் சஞ்சிகையும் இவரால் எழுதப்பட்டவை ஆகும்.
வளங்கள்
- நூலக எண்: 222 பக்கங்கள் 152
- நூலக எண்: 13943 பக்கங்கள் 25-34
- நூலக எண்: 4393 பக்கங்கள் 145-148