ஆளுமை:தாமரைத் தீவான், சோமநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாமரைத் தீவான்
தந்தை சோமநாதர்
தாய் முத்துப்பிள்ளை
பிறப்பு 1932.07.24
ஊர் ஈச்சத்தீவு, திருகோணமலை
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோ. முத்துப்பிள்ளை எனும் இயற் பெயரைக் கொண்ட தாமரைத் தீவான் (1932.07.24 - ) திருகோணமலை, ஈச்சத்தீவைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை சோமநாதர்; தாய் முத்துப்பிள்ளை. இவர் திருகோணமலை தாமரைவில் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், திருகோணமலை மூதூர் அந்தோனியார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் கல்வி பெற்று 1955ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்துகொண்டார். இவரது முதல் நியமனம் திருகோணமலை யோசப் கல்லூரியாக இருந்தது. 1972ஆம் ஆண்டு அதிபர் தரத்திற்கு உயர்வு பெற்று 1987இல் ஓய்வுபெற்றுக்கொண்டார்.

படைப்புத் துறையில் இவரது முதல் ஆக்கம் சுதந்திரன் பத்திரிகையில் வெள்ளைப் பூனை எனும் தலைப்பில் வெளியானது. அதிலிருந்து ஐந்து தசாப்த காலங்களுக்கு மேலாக கவிதை, கட்டுரை, வில்லுப்பாட்டு என 500க்கும் மேற்பட்ட ஆக்கங்களை எழுதியுள்ளார். இவரது ஆக்கங்கள் சுதந்திரன், வீரகேசரி, சுடர், சிந்தாமணி, சூடாமணி, தமிழ் உலகம் முதலான பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவர் பிள்ளைமொழி, கீறல்கள், கட்டுரைப் பத்து, போரும் பெயர்வும், ஐம்பாலைம்பது, வள்ளுவர் அந்தாதி, முப்பத்திரண்டு, சிறு விருந்து, சோமம், எண் பா நூறு, ஐந்தொகை, இணைப்பு முதலான கவிதைத் தொகுப்புக்களை ஆக்கியுள்ளார். கலைத்துறையின் மேம்பாட்டிற்கு இவர் ஆற்றிய மேலான சேவையினை பாராட்டி இலங்கை அரசு 2004ஆம் ஆண்டுக்கான 'கலாபூஷணம்' விருதினை வழங்கிக் கெரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 149-151


வெளி இணைப்புக்கள்