ஆளுமை:கிருஷ்ணபிள்ளை, சின்னையா (திமிலைத் துமிலன்)

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:01, 17 செப்டம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கிருஷ்ணபிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிருஷ்ணபிள்ளை, சின்னையா (திமிலைத் துமிலன்)
தந்தை சின்னையா
தாய் இராசம்மா
பிறப்பு 1933.09.25
ஊர் ஏறாவூர்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சின்னையா கிருஷ்ணபிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட திமிலைத் துமிலன் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் சின்னையா, இராசம்மா தம்பதியரின் மகனாக 1933 செம்டெம்பர், 25ம் திகதி பிறந்தார். இவர் திமிலைத் துமிலன் என்ற புனைபெயரோடு கிருஷ்ண பாரதி, கிருஷ்ணா, ஆலையடிச் சோலையான், பேய்மகன், இளமாலதி, மாலதி ஆகிய புனைபெயர்களிலும் ஆக்கங்களை வெளியிட்டுள்ளார்.

ஆரம்பக் கல்வியை வலையிறவு மெ. மி. பாடசாலையிலும், உயர்கல்வியை மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் மேற்படிப்பை மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும், பேராதனைப் பல்கலைக்கழகத்திலும், கொழும்பு பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். ஆசிரியராகவும், மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலை விரிவுரையாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

எழுத்தாளராகவும், ஓவியராகவும் பணி செய்த இவர் நீரர மகளிர், பாவலர் ஆகலாம், கொய்யாக் கனிகள், நெஞ்சம் மலராதோ இசைப் பாக்கள், அழகு முல்லை சிறுவர் பாடல் முதலான இலக்கிய நூல்களை ஆக்கியுள்ளதோடு கதம்பம், கலைச்செல்வி சஞ்சிகைகளில் ஓவியராகவும் பணி புரிந்துள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 101-103