ஆளுமை:சதாசிவம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவம்பிள்ளை, அருணாசலம்பிள்ளை
தந்தை அருணாசலம்பிள்ளை
தாய் ஆனந்தப்பிள்ளை
பிறப்பு 1820.10.11
இறப்பு 1895.02.20
ஊர் மானிப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. சதாசிவம்பிள்ளை (1820.10.11 - 1895) யாழ்ப்பாணம், மானிப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை அருணாசலம்பிள்ளை; தாய் ஆனந்தப்பிள்ளை. இளமைக்காலத்தில் தமது ஊரிலுள்ளதொரு தமிழ்ப் பாடசாலையிலும், பின்னர் அமெரிக்க மிஷன் பாடசாலையிலும் கல்வி கற்ற பின் 1831ஆம் ஆண்டில் மானிப்பாய் ஆங்கிலப் பாடசலையிலும், வட்டுக்கோட்டை செமினரியிலும் பயின்றார்.

ஆரம்பத்தில் மானிப்பாய், சாவகச்சேரி, உடுவில் ஆகிய இடங்களில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1847ஆம் ஆண்டில் உடுவில் பெண்கள் பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றி 1854இல் அப்பாடாசாலையின் தலைமையாசிரியராக உயர்வுபெற்றார். 1857ஆம் ஆண்டில் உதயதாரகை பத்திரிகையின் ஆசிரியராக கடமையேற்று நாற்பது ஆண்டுகளாக பணியாற்றினார். 1881ஆம் ஆண்டில் யாழ்ப்பாணக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப்பண்டிதராக விளங்கி 1891ஆம் ஆண்டில் கற்பித்தலிலிருந்து ஓய்வுபெற்றார்.

தமிழ் புலவர்களின் வரலாற்று நூலாகிய 'பாவலர் சரித்திர தீபகம்' என்னும் அரும்பெரும் நூலை இவர் எழுதியதோடு இரட்சாபெருமான் மீது பாடிய திருச்சதகம், மெய்வேத சாரம், நன்னெறிக் கொத்து, இல்லற நொண்டி, கீர்த்தனா சங்கிரகம், வெல்லை அந்தாதி, சாதாரண இதிகாசம், வான சாத்திரம், நன்னெறிக் கதா சங்கிரகம், பாவலர் சரித்திர தீபகம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ள இவர் 1895ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 201
  • நூலக எண்: 300 பக்கங்கள் 28-29
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 227
  • நூலக எண்: 963 பக்கங்கள் 101-103


வெளி இணைப்புக்கள்